திமுக பொதுச் செயலாளராக நீண்ட ஆண்டுகள் பதவி வகித்த க.அன்பழகன் காலமானதால், பொதுச் செயலாளர் பதவி காலியானது.
கொரோனா காரணமாக பொதுக்குழு கூட்டம் தள்ளிப்போய் வந்தது. இந்நிலையில், காணொலி மூலமாக பொதுக்குழுவைக் கூட்ட முடிவு செய்து, பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வுக்காக பொதுக்குழு கூட்டப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள்.
துரைமுருகன், டி.ஆர்.பாலுவைத் தவிர வேறு யாரும் வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்யாத நிலையில், இருவரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிறது. இருவரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“திமுகவின் பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் துரைமுருகனுக்கும், பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் டி.ஆர். பாலுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” - என்று ரஜினிகாந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.